Monday, November 16, 2009

வாழ்த்துக்கள்

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்


இறையருளாலும், எம்பெருமானார் (ஸல்) அவர்களின் நல்லாசியாலும், இன்று 15.11.2009, ஞாயிற்றுக்கிழமை, ஹிஜ்ரி 1430 துல்காயிதா பிறை 27 . காலை 10.00 மணிக்கு, கடையநல்லூர், மஸ்ஜித் பிலால் பள்ளியில்
மணவிழா காணும், எஙகள் அன்பின் உறைவிடம், கண்ணியம்மிகு
அல்ஹாஜ் ஹாஃபிழ்
M.A. ஷைகு உதுமான் ஆலிம் ஜமாலி
அவர்களின் செல்வப்புதல்வன்

மணாளர்
M.S. முஹம்மது அபுபக்கர் சித்தீக்
மணாளி
S.M. தஸ்னீம் ஜமீலா

இவர்கள் இருவரும் நபிவழி பேணி, மறைவழி நடந்து,
இல்லறம் சிறக்க, நல்லறம் பூண்டு, பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுகின்றோம்.
அன்புடன் வாழ்த்தும்..
வடக்கு மாங்குடி
ஹாஜி A. அப்துல் முத்தலிப்
A. முஹம்மது ஆரிப்

(குவைத்)

Tuesday, October 27, 2009

12 FOODS OF PROPHET MUHAMMAD (PBUH)

Barley:
Good in fever, while use in a soup form.


Dates:
The Prophet (SAW) said that a house without dates has no food. It should also be eaten at the time of childbirth.

Figs:
It is a fruit from paradise and a cure for piles.


Grapes:
The Prophet (SAW) was very fond of grapes - it purifies the blood, provides vigor and health, strengthens the kidneys and clears the bowels.


Honey:
Considered the best remedy for diarrhea when mixed in hot water. It is the food of foods, drink of drinks and drug of drugs. It is used for creating appetite, strengthening the stomach, eliminating phlegm; as a meat preservative, hair conditioner, eye soother and mouthwash. It is extremely beneficial in the morning in warm water.


Melon:
The Prophet (SAW) said: 'None of your women who are pregnant and eat of water melon will fail to produce off spring that is good in countenance and good in character... '


Milk:
The Prophet (SAW) said that milk wipes away heat from the heart just as the finger wipes away sweat from the brow. It strengthens the back, improved the brain, renews vision and drives away forgetfulness.


Mushroom:
The Prophet (SAW) said that mushroom is a good cure for the eyes; it also serves as a form of birth control and arrests paralysis.


Olive Oil:
Excellent treatment for skin and hair, delays old age, and treats inflammation of the stomach.


Pomegranate:
The Prophet (SAW) said it cleanses you of Satan and evil aspirations for 40 days.


Vinegar:
A food Prophet Mohammed (SAW) used to eat with olive oil. [That's now a fashion in elite Italian Restaurants]


Water:
The Prophet (SAW) said the best drink in this world is water, when you are thirsty drink it by sips and not gulps, gulping produces sickness of the liver.

Tuesday, October 13, 2009

உலக முஸ்லிம்கள்

உலகில் 3 வது இடம்: இந்தியாவில் 16 கோடி முஸ்லிம் மக்கள்

அமெரிக்காவில் உள்ள திங்டாங் ஆய்வு மையம் உலகில் வாழும் முஸ்லிம் மக்கள் பற்றி ஒரு கணக்கெடுப்பு நடத்தி உள்ளது. 1500 வகையான ஆதாரங்களை மையமாக வைத்து இந்த கணக்கெடுப்பை நடத்தி உள்ளது.

அதில் உலகில் மொத்தம் உள்ள 680 கோடி மக்களில் 157 கோடி பேர் முஸ்லிம்கள் என்று தெரிய வந்துள்ளது. அதாவது உலகில் 23 சதவீத மக்கள் முஸ்லிம்களாக உள்ளனர். 232 நாடுகளில் முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.

உலகிலேயே அதிக முஸ்லிம்கள் வசிக்கும் நாடு இந்தோனேசியா. அங்கு 20 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். 2 வது இடம் பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ளது. அங்கு 17 கோடியே 40 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். 3 வது இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு 16 கோடியே 9 லட்சம் முஸ்லிம்கள் இருக்கின்றனர்.

இந்திய மக்கள் தொகையில் 13.4 சதவீதம் பேர் முஸ்லிம்கள். ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வாழும் 4 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.

உலகில் வாழும் மொத்த முஸ்லிம்களில் 87ல் இருந்து 90 சதவீதத்தினர் ஷன்னி பிரிவு முஸ்லிம்கள் 10ல் இருந்து 13 சதவீதம் பேர் ஷியா முஸ்லிம்கள்.

ஷியா முஸ்லிம்களில் 68ல் இருந்து 80 சதவிதத்தினர் இந்தியா, ஈரான், பாகிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் வசிக்கின்றனர்.

மக்கள் வாழும் அனைத்து கண்டங்களிலும் முஸ்லிம்கள் உள்ளனர். உலகில் 60 சதவித முஸ்லிம்கள் ஆசியாவில் வசிக்கின்றனர். மத்திய கிழக்கு நாடு மற்றும் வட ஆப்பிரிக்காவில் 20 சதவீத முஸ்லிம்கள் இருக்கின்றனர்.

முஸ்லிம்கள் மெஜாரிட்டியாக இல்லாத நாடுகளில் மட்டும் 30 கோடி முஸ்லிம்கள் உள்ளனர்.
இந்தோனேசிய மக்கள் தொகையில் 88.2 சதவீதம் பேரும், பாகிஸ்தான் மக்கள் தொகையில் 96.3 சதவீதம் பேரும் முஸ்லிம்கள். வங்காளதேசம், எகிப்து, நைஜீரியா, ஈரான், துருக்கி, அல்ஜீரியா, மொராக்கோ, ஆகியவை அதிக முஸ்லிம் மக்கள் கொண்ட நாடுகள் ஆகும்.

சிரியாவில் உள்ள முஸ்லிம்களைவிட சீனாவில் அதிக முஸ்லிம்கள் உள்ளனர். ஜோர்டான், லிபியா இரு நாட்டு முஸ்லிம்களை விட ரஷியாவில் அதிக முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.


நன்றி "மாலை மலர்"

சிறந்த ஆட்சியாளர்

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது குடிமக்கள் நிலையை அறிவதற்காக நகர்வலம் செல்லும் வழக்கம் உடையவர்கள். அப்போது மதினா நகரெங்கும் பஞ்சம் நிலவி வந்தது. நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட அனனவருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதில் உமர் (ரலி) அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தினார்கள். ஒருநாள் இரவு நேரத்தில் கலிஃபா அவர்கள் தமது உதவியாளர் அஸ்லம் என்பாருடன் மதினாவின் புறநகர்ப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு குடிசையிலிருந்து விளக்கு வெளிச்சமும் குழந்தைகளின் அழுகுரலும் வரக் கண்டார்கள்.

கலிஃபா அவர்கள் அந்தக் குடிசையை நெருங்கிய போது, அங்கே ஒரு பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் கண்டார்கள்.
கலிஃபா உமர் (ரலி) அவர்கள், அப்பெண்மணிக்கு சலாம் சொல்லி அவரது அனுமதி பெற்று அவருக்கருகில் சென்றார்கள். அந்தப் பெண்மணி உமர் (ரலி) அவர்களை பார்த்ததில்லை என்பதால் வந்திருப்பவர் கலிஃபா என்பதை அறியவில்லை.

உமர் (ரலி): “குழந்தைகள் ஏன் அழுது கொண்டிருக்கின்றன?”

பெண்மணி: “அவர்கள் பசியோடிருக்கின்றார்கள். அதனால்தான் அழுகிறார்கள்”

உமர் (ரலி): “அடுப்பில் என்ன இருக்கிறது?”

பெண்மணி: “அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான். அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தூங்கி விடுவார்கள். அதற்காகத்தான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன். இந்தத் துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவியையும் செய்யாத
கலிஃபா உமர் அவர்களுக்கும் எனக்குமிடையில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்தான் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவான்”.

அப்பெண்மணியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு பதறிப்போன
கலிஃபா உமர் (ரலி) அவர்களின் கண்களில் நீர் வழிந்தோட, “அல்லாஹ் உம் மீது கிருபை செய்வானாக! உமது துன்பமான நிலைமையை உமர் எப்படி அறிவார்?” என்று வினவினார்.

“முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் உமர் எங்கள் நிலைமையை அறிந்திருக்க வேண்டாமா? என்றார் அந்தப் பெண்மணி.

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் விரைந்து நகருக்குத் திரும்பி உடனே பைத்துல் மாலுக்குச் சென்றார்கள். ஒரு சாக்குப்பையில் மாவு, நெய், பேரீத்தம் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களும் துணிமணிகளும் எடுத்து வைத்தார்கள். கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டார்கள். சாக்குப்பை நிரம்பியதும் தமது உதவியாளரை அழைத்து, அதைத் தூக்கி தமது முதுகில் வைக்கும்படி சொன்னார்கள்.

அவர்களின் உதவியாளர் அஸ்லம் பதறியவாறு, “இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேனே அமீருல் முஃமினீன் அவர்களே!” என்றார். உமர் (ரலி) அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. “என்ன? நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா? மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி கேள்வி கேட்கப்படப் போவது நான்தானே? அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும்!”

அஸ்லம் மிகவும் தயங்கியபடி அந்த மூட்டையைத் தூக்கி கலிஃபா அவர்களின் முதுகின் மேல் வைத்தார். அதனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அப்பெண்மணியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள் உமர் (ரலி) அவர்கள். அஸ்லமும் அவர்களை பின்தொடர்ந்து சென்றார்.

குடிசையை அடைந்த உமர் (ரலி) அவர்கள் மூட்டையிலிருந்து மாவு, நெய், பேரீத்தம் பழங்களை எடுத்து அவற்றை பிசைந்து, அடுப்பிலிருந்த சட்டியிலிட்டு கிளறினார்கள்.. அருகிலிருந்த ஊதுகுழலை எடுத்து ஊதி அடுப்புத் தீயை தூண்டி எரியச் செய்தார்கள். அவர்களின் அடர்ந்த தாடிக்குள் புகை படிந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு உணவு தயாரானதும் கலிஃபா அவர்களே அந்த உணவை அப்பெண்மணிக்கும் அவரது குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள். மீதம் இருந்த உணவுப் பொருட்களை அவர்களின் அடுத்த வேளை உணவிற்காக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தார்கள். வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த உமர் (ரலி) அவர்களின் முகமும் மலர்ந்தது.

உமர் (ரலி) அவர்கள் அப்பெண்மணியிடம் ‘அக்குடும்பத்தை பராமரிப்பவர் யாரும் இல்லையா’ என வினவினார்கள். அந்தக் குழந்தைகளின் தந்தை இறந்து விட்டதாகவும் அவர்களுக்கு ஆதரவளிக்க வேறு யாரும் இல்லை எனவும் அப்பெண்மணி தெரிவித்தார். வீட்டிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்துப் போய் மூன்று நாட்களாக பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண்மணி சொன்னார், “உங்களின் இந்த கருணைச் செயலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக! உண்மையில் கலிஃபா பதவிக்கு உமரை விட நீங்களே மிகப் பொருத்தமானவர்”. அவருக்கு எதிரில் அமர்ந்திருப்பது
கலிஃபா உமர் (ரலி) அவர்கள்தாம் என்பதை அம்மாது இன்னும் அறிந்து கொள்ளவில்லை!

உமர் (ரலி) அவர்களும் ‘தாம் இன்னார்’ என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நீர் கலிஃபாவை சந்திக்கும்போது அங்கே என்னை கண்டு கொள்வீர்” என்றார்கள்.

கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள் அதன் பின்னர் மதினா திரும்பினார்கள். செல்லும் வழியில் தன் உதவியாளரிடம் சொன்னார்கள், “அஸ்லம், நான் ஏன் அங்கே அமர்ந்திருந்தேன் தெரியுமா? அக்குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்ததை பார்த்த நான் அவர்கள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடுவதையும் சிறிது நேரம் பார்க்க விரும்பினேன். அதனால்தான்.”

வீரத்திற்குப் பெயர் பெற்ற உமர் (ரலி) அவர்கள், கருணையுள்ளம் உடையவராகவும் குடிமக்கள் மேல் அக்கறை கொண்ட பொறுப்பான தேசத் தலைவராகவும் விளங்கினார்கள்.

Thursday, October 8, 2009

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். . . .


திருமண வாழ்த்து

மணமகன் : P.N.R. ஷேக் அப்துல் காதர்
(ரிஜ்வான்)
மணமகள் : S. பாத்திமாஜான்
(ஜாஸ்மின்)

மணநாள் : 8.10.2009 வியாழக்கிழமை
ஹிஜ்ரி 1430 ஷவ்வால் பிறை 18
மதியம் 11.30 மணி

மணமேடை : ஜாமிஆ மஸ்ஜித் (மேலப்பள்ளிவாசல்)
சக்கராப்பள்ளி - அய்யம்பேட்டை.
.
இன்று மணவிழா காணும் இம்மணமக்கள் இருவரும்
நபிவழி பேணி, மறைவழி நடந்து, இல்லறம் சிறக்க,
நல்லறம் பூண்டு பல்லாண்டு வாழ
எல்லாம் வல்ல இறைவனிடம்
இறைஞ்சுகின்றோம்.
*
அன்புடன் வாழ்த்தும். . .

A. அப்துல் முத்தலிப்
பர்வீன் முத்தலிப்
வஞ்சுவழி & வடக்கு மாங்குடி
தஞ்சை மாவட்டம்

Monday, September 21, 2009

ஈத் முபாரக். . .


உலக முஸ்லிம்கள் அனைவர்களுக்கும் எங்கள் இதயங்கனிந்த ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்


A. அப்துல் முத்தலிப்

A. முஹம்மது ஆரிப்
குவைத்

Saturday, August 22, 2009

ரமழான் முபாரக்


புனிதமிகு ரமழானில் எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர்களையும் நேர்வழியில் அழைத்துச்செல்ல
இருகரமேந்தி இறைஞ்சுகின்றோம். ஆமீன்..

அன்புடன்.
ஹாஜி A. அப்துல் முத்தலிப்
A. முஹம்மது ஆரிப்
குவைத்



Monday, August 3, 2009

வருந்துகிறோம். . .


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மிகச்சிறந்த தலைமகனாகவும், அரசியலிலும் ஆன்மீகத்திலும் அனைவருக்கும் சிறந்த வழிகாட்டியாகவும், அனைத்து சமுதாய மக்களின் இதயங்களிலும் நீங்கா இடம் பெற்ற, கேர‌ள‌ மாநில‌ முஸ்லிம் லீக் த‌லைவ‌ர்

பான‌க்காடு சைய‌து முஹ‌ம்ம‌த‌லி ஷிஹாப் த‌ங்க‌ள்

அவ‌ர்க‌ள் இறையடி சேர்ந்து விட்டதையறிந்து மிகவும்
மனவேதனை அடைகிறோம்.
( இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன் )

அன்னாரின் பிரிவால் வாடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அன்பர்கள், அன்னாரின் குடும்பத்தினர்கள், மற்றும் நண்பர்கள் அனைவர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.
அன்னாரின் மஅபிரத்துக்காக துஆ செய்யுமாறு அன்புடன்
கேட்டுக் கொள்கிறோம்.

அன்னாரின் பிரிவால் வருந்தும்.,

டாக்டர் K.S. அன்வர் பாட்சா
ஹாஜி A. அப்துல் முத்தலிப்
A. முஹம்மது ஆரிப்
குவைத்
மின்னஞ்சல் : abuwaseema@gmail.com

Sunday, July 12, 2009

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். . . .

திருமண வாழ்த்து

மணமகன் : P. அப்துல் ஜப்பார்
மணமகள் : A. அனீசா பர்வீன்

மணநாள் : 12.07.2009 - ஞாயிற்றுக்கிழமை,
ஹிஜ்ரி 1430 ரஜப் பிறை 18, காலை 11.30 மணி

மணமேடை : மேலப்பள்ளிவாசல்,
மேலத்திருப்பூந்துருத்தி
தஞ்சை மாவட்டம்.

இறையருளால் இல்லறம் காணும் இம்மணமக்கள் இருவரும் நபிவழி பேணி, மறைவழி நடந்து, இல்லறம் சிறக்க,நல்லறம் பூண்டு பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுகின்றோம்.

அன்புடன் வாழ்த்தும்

B. முஹம்மது இக்பால் - அஸ்மா இக்பால்
M. முஹம்மது சல்மான்
M. பிஸ்மி பைரோஸ்
மேலத்திருப்பூந்துருத்தி - தஞ்சை மாவட்டம்

ஹாஜி A. அப்துல் முத்தலிப் – பர்வீன் முத்தலிப்
A. முஹம்மது ஆரிப் - தாஹிரா ஆரிப்
வஞ்சுவழி & வடக்கு மாங்குடி
தஞ்சை மாவட்டம்